விஜய்யை அடுத்து அஜித் படத்தில் நடிப்பதையும் உறுதி செய்த யோகிபாபு!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு சமீபத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் என்ற செய்தியைப் பார்த்தோம். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது ’தளபதி 65’ படத்தில் நடிப்பதை தெரிவித்திருந்தார். இதனை அடுத்து மெர்சல், சர்க்கார், பிகில் படங்களுக்கு அடுத்து நான்காவது முறையாக அவர் விஜய்யுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜீத் நடித்து வரும் ’வலிமை’ படத்தில் யோகி பாபு நடித்து வருவதாக தகவல்கள் வெளி வந்தாலும் அதனை படக்குழுவினர் உறுதி செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில் இந்த தகவலை தற்போது யோகிபாபு அதனை உறுதி செய்துள்ளார்

யோகிபாபுவின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ’வலிமை’ படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ’ஆமாம்’ என்று யோகிபாபு பதிலளித்து உள்ளதை அடுத்து யோகி பாபு ’வலிமை’ படத்தில் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜீத் நடித்த வீரம், விஸ்வாசம், வேதாளம் ஆகிய படங்களில் யோகி பாபு நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட்: சத்தமின்றி சூர்யா செய்த உதவி!

இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர் என்பது தெரிந்ததே. ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 4000

பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியை பளார் விட்ட இளைஞர் கைது!

பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியை கன்னத்தில் பளாரென அறைந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம்: பொதுமக்கள் நேரடியாக புகாரளிக்க வசதி!

தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நர்ஸ்-ன் கவனக்குறைவு....! பச்சிளங்குழந்தையின் விரல் போன பரிதாபம்...!

செவிலியர் ஒருவரின் கவனக்குறைவால், பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் விரல் பரிதாபமாக பறிபோயுள்ளது.

கொரோனா தொடர்பான பொருட்களுக்கு விலை நிர்ணயம்....! தமிழக அரசு அறிவிப்பு....!

கொரோனா சார்ந்த பொருட்களான முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களுக்கு, தமிழக அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது.