'தக்லைஃப்' படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கும் படம்.. ஹீரோ, தயாரிப்பாளர் யார் யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்த 'தக்லைஃப்’ பெற்ற படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில், இந்த படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 'தக்லைஃப்’ படம் ரிலீஸ் ஆனவுடன் அடுத்த சில மாதங்களிலேயே மணிரத்னம் அடுத்த படத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்க இருப்பதாக கோலிவுட் திரை உலக வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே லைக்கா நிறுவனத்தில் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களையும் மணிரத்னம் தான் இயக்கினார் என்பதும், இந்த இரண்டு படங்களால் லைக்கா நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்த நிலையில் மீண்டும் லைக்கா மற்றும் மணிரத்னம் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
’செக்க சிவந்த வானம்’ படத்தில் மணிரத்னம் மற்றும் சிம்பு முதன்முதலாக இணைந்த நிலையில், அதனை அடுத்து 'தக்லைஃப்’ படத்திலும் இருவரும் இணைந்து பணிபுரிந்தனர். தற்போது மூன்றாவது முறையாக மணிரத்னம்–சிம்பு காம்பினேஷனில் ஒரு படம் உருவாக இருப்பதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிம்பு ஏற்கனவே மூன்று படங்களில் கமிட் ஆகி உள்ள நிலையில், இந்த படம் அதற்கு முந்துமா அல்லது தாமதம் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments