டுவிட்டர் முடக்கத்தை அடுத்து இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்: கங்கனாவுக்கு தொடரும் சோதனை!

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்சிஜன் குறித்து சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டுவிட்டரை அடுத்து இன்ஸ்டாகிராமில் கங்கனா ரனாவத் பதிவு செய்த ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா வைரஸ் என்பது சாதாரண ஃப்ளூ காய்ச்சல் போன்றதுதான் அதனால் யாரும் பயப்பட வேண்டாம் என்று பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவு பெரும் சர்ச்சையானதை அடுத்து தற்போது இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அந்த பதிவை நீக்கி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்பது சாதாரண காய்ச்சல் என்ற நடிகை கங்கனா ரனாவத்தின் பதிவுக்கு பல கண்டனங்கள் குவிந்து உள்ளதை அடுத்து இன்ஸ்டாகிராம் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. டுவிட்டர் முடக்கம் இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம் என தொடர்ந்து அடுத்தடுத்து கங்கனாவுக்கு சோதனை தொடர்ந்து வருகிறது.