'வேட்டையன்' இயக்குனரின் அடுத்த பட நாயகன் இவரா? வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தை இயக்கி வரும் ஞானவேல் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தை இயற்றியதன் மூலம் திரையுலகின் கவனத்தை பெற்ற ஞானவேல் அவர்களுக்கு அடுத்த படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பட வாய்ப்பு கிடைத்தது என்பதும் ’வேட்டையன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

’வேட்டையன்’ படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் என்றும் இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’வேட்டையன்’ படத்தை முடித்தவுடன் ஞானவேல் இயக்கும் படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அவரது அடுத்த படத்தில் பிரபல நடிகர் நானி நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் ’வேட்டையன்’ படம் ரிலீசுக்கு பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படத்தை உருவாக்க ஞானவேல் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் நானி தற்போது ’சரிபோதா சனிவாரம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இதையடுத்து ஞானவேல் படத்தில் நானி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ZEE5 இல் விஸ்வக் சென்னின் 'காமி' திரைப்படம்.. உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டம்..!

உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டமாக, ஏப்ரல் 12 முதல், நடிகர் விஸ்வக் சென்னின் "காமி" திரைப்படம்,  தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில், ZEE5 இல்  திரையிடப்படுகிறது!

ஜோதிகாவுக்கும் வந்ததா இரண்டாம் பாக ஆசை? முதல் பாக இயக்குனருக்கு அட்வான்ஸ்..!

கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் ரஜினி, கமல் உட்பட பல பிரபலங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும்

ரிலீசாகி இரண்டே வாரத்தில் ஓடிடிக்கு வந்த ஜிவி பிரகாஷ் படம்.. ரூல்ஸ் எல்லாம் அவ்வளவுதானா?

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இன்று திடீரென ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளதை

ஒரே நாளில் 2 பட பூஜை போட்ட தயாரிப்பாளர்.. ஒன்று 2ஆம் பாகம்.. இன்னொன்று 4ஆம் பாகம்..!

பிரபல தயாரிப்பாளர் நேற்று ஒரே நாளில் இரண்டு படங்களையும் பூஜையை போட்டுள்ள நிலையில் அதில் ஒரு படம் அவர் தயாரித்த படத்தின் 2ஆம் பாகம் என்றும் இன்னொரு படம் அவர் தயாரித்த படத்தின் 4ஆம் பாகம்

இத்தனை சர்ச்சைகளுக்கு பிறகும் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் அரசியல் பயணம்.

மருத்துவத் துறையில் சிறந்து விளங்கினாலும் அரசியல் மற்றும் பேச்சு இதுவே தமிழிசைக்கு இரு கண்களாக இருந்தது....