விஜய், தனுஷ் படத்தை அடுத்து சஞ்சய் தத் நடிக்கும் இன்னொரு படம்!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தென்னிந்திய திரைப்படமான ’கேஜிஎப் 2’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ’தளபதி 67’ திரைப்படத்தில் வில்லனாக சஞ்சய்தத் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

அதேபோல் தனுஷ் நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவிருக்கும் படத்தில் சஞ்சய் தத் நடிக்கவிருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய், தனுஷ் படங்களை அடுத்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சஞ்சய் தத் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மாருதி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது .இந்த படத்தில் சஞ்சய்தத் நடிக்க பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், ஆனால் இந்த படத்தில் சஞ்சய்தத்துக்கு வில்லன் கேரக்டர் இல்லை என்றும் படத்தில் உள்ள முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அடுத்தடுத்து தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

உலகக்கோப்பை நாயகன் மெஸ்ஸிக்கு மனைவி கொடுத்த முத்தம்.. ரொமான்ஸ் புகைப்படங்கள்!

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே 

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் ரசித்த சூப்பர் ஸ்டார் நடிகர்!

உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல்

லியோனல் மெஸ்ஸி, இன்று உங்கள் நாள்: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த சூப்பர் புகைப்படங்கள்!

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக வெற்றி பெற்றது.

கோவிலில் பிச்சை எடுத்த சிறுவன் திடீரென கோடீஸ்வரனாக மாறிய அதிசயம்.. எப்படி தெரியுமா?

 உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் வறுமை காரணமாக கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு கோடிக்கணக்கான சொத்து இருப்பதாக தெரிய வந்தது பெரும்

சூடு பிடிக்கும் பிக்பாஸ்.. மீண்டும் ஓப்பன் நாமினேஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் முடிந்து 71வது நாள் இன்று நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது