close
Choose your channels

தளபதி விஜய்யை அடுத்து இளம் ஹீரோவுடன் இணையும் சரத்குமார்!

Monday, May 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரத்குமார், நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் I B கார்த்திகேயன் திரிபுரா கிரியேஷன்ஸ் & டாரஸ் சினி கார்ப் நிறுவனங்கள் இணைந்து தயாக்கும் த்ரில்லர் படத்தில் கௌதம் கார்த்திக் - சரத்குமார் இணைந்து நடிக்க்கவுள்ளனர்.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், சமீபத்தில் சோனிலைவ் தளத்தில் வெளியான, “கிளாப்” மிக அற்புதமான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது திரிபுரா கிரியேஷன்ஸ் & டாரஸ் சினி கார்ப் நிறுவனத்துடன் இணைந்து அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்த புதிய படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் மதுரை பின்னணியில் ஆக்‌சன் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை தட்சிணாமூர்த்தி ராமர் இயக்குகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் சாம் சிஎஸ் இசையமைப்பில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்ப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.

கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்‌சன் நிரம்பிய இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம், திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய விருந்தாக இருக்கும். படத்தின் இயக்குனர், தட்சிணாமூர்த்தி ராமர் இந்த படம் குறித்து கூறியபோது, ‘கௌதம் கார்த்திக், சரத்குமார் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகர்களுடன் பணியாற்றுவது எனது கனவு நனவான தருணம். அவர்களின் பேரார்வமும் அர்ப்பணிப்புமிக்க திறமையும் கலந்த நடிப்பில், சினிமா அரங்குகள் கூஸ்பம்ப்ஸ் தருணங்களால் நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன். திரையுலகில் சரத் சாரை ரசித்து வளர்ந்த நான், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எழுதும்போது கூட, சரத் சாரை மனதில் வைத்திருந்தேன், ஆனால் அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று உறுதியாக தெரியவில்லை, கதையை விவரித்தவுடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஆச்சர்யம் தந்தார்.

சரத் குமாரின் கதாப்பாத்திரம் குறித்து மேலும் கூறுகையில், “இதுவரை சரத்குமார் தனது படங்களில் நேர்மையான போலீஸ் வேடத்தில் நடித்ததை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்தப்படத்தில் அவர் மதுரையில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரியாக மதுரை வட்டார வழக்கு மொழியுடனும், உடல்மொழியுடனும் அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாக நடிக்கவுள்ளார்’ என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.