தில் ராஜூ வீட்டை அடுத்து 'புஷ்பா 2' இயக்குனர் வீட்டில் ஐடி ரெய்டு.. திரையுலகில் பரபரப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ உள்பட பல பிரபலங்கள் நடித்த படத்தை தயாரித்த தில் ராஜூ வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று ‘புஷ்பா 2’ இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியாகும் திரைப்படங்கள் சமீபகாலமாக மிகப்பெரிய வசூலை சமீப காலமாக பெற்று வருகிறது என்பதும், அதன் காரணமாக வருமான வரி துறையின் பார்வை தெலுங்கு திரையுலகின் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று தில் ராஜூ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், இன்று ‘புஷ்பா 2’ பட இயக்குனர் சுகுமார் வீட்டில் சோதனை நடந்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ.1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென இயக்குனர் சுகுமார் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.
ஏற்கனவே ‘புஷ்பா 2’ தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தின் இயக்குனர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments