close
Choose your channels

போதை பொருள் வழக்கில் மேலும் ஒரு பிரபல நடிகை கைது!

Tuesday, September 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நடிகை ராகினி திவேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும், அவரிடம் போலீசார் கடந்த 3 நாட்களாக விசாரணை செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவருடைய ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் ராகினி கைதை அடுத்து தற்போது நடிகை சஞ்சனா கல்ராணியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சஞ்சனா கல்ராணி வீட்டில் சோதனை செய்ததாகவும் சோதனைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து இந்த வழக்கில் மொத்தம் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்தடுத்து இரண்டு பிரபல நடிகைகள் போதைப்பொருள் விவகார வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சஞ்சனா கல்ராணி, தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.