சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் 'ரஜினிமுருகன்' நாயகி?

  • IndiaGlitz, [Saturday,October 03 2015]

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இதே ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'ரஜினிமுருகன்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் நண்பர் பாக்யராஜ்கண்ணன் இயக்கவுள்ள இந்த படத்தில் பெண்வேடம் உள்பட மிகவும் வித்தியாசமான கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்த புதிய தகவலின்படி மீண்டும் 'ரஜினிமுருகன்' நாயகி கீர்த்திசுரேஷ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒளிப்பதிவு மேதை பி.சி.ஸ்ரீராம், மற்றும் வெளிநாட்டு மேக்கப்மேன்கள் பணிபுரியவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

'புலி', 'வேதாளம்' படங்களை இணைத்த கமலின் 'தூங்காவனம்'

நேற்று முன் தினம் விஜய் நடிப்பில் வெளியாகிய 'புலி' திரைப்படத்தை அமெரிக்காவில் ATMUS Entertainment நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட்டது என்பதை அனைவரும் அறிவோம்...

'புலி'க்கு வரிவிலக்கு ஏன் இல்லை? அதிகாரிகள் கூறிய காரணங்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு மறுக்கப்பட்டது. தமிழில் பெயர் வைக்கப்பட்டும், யூ'...

அஜீத்தின் 'வேதாளம்' படத்தில் ஸ்ருதிஹாசன் பாடும் பாடல்

நேற்று முன் தினம் விஜய், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 'புலி' படத்தில் இடம்பெற்ற 'ஏண்டி ஏண்டி' பாடல் படத்தின் ரிலீஸுக்கு பின்னரும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

பாண்டவர் அணியை கமல் தூண்டிவிடுகிறார். சரத்குமார் குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் மனுதாக்கல் செய்து தேர்தல்...

கவுண்டமணியின் அதிரடி முடிவு

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கவுண்டமணி நடித்த '49 ஓ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில்,...