close
Choose your channels

விஜய் ஆண்டனி - அருண்விஜய் படத்தின் புதிய அப்டேட்!

Saturday, June 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'அக்னி சிறகுகள்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'மூடர் கூடம்' நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் முக்கிய வேடத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் ஆண்டனி, அருண்விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஐரோப்பா செல்லவுள்ளனர். அங்கு 50 நாட்கள் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் நவீன் கூறுகையில், 'ஆக்சன் காட்சிகளுக்காக விஜய் ஆண்டனி, அருண்விஜய் இருவருமே நல்ல உடல்தகுதியை பெற்றுள்ளதாகவும், அவர்களுடைய சிறப்பான ஈடுபாட்டை எண்ணி வியந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஐரோப்பாவில் அவர் இயக்கி வரும் இன்னொரு படமான 'அலாவுதினும் அற்புத விளக்கும்' படப்பிடிப்பும் நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, அருண்விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்து வருகிறார். அச்சு ராஜாமணி இசையில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.