ஆக்சிஜன் இல்லாமல் தவித்த கணவருக்கு வாயோடு வாயாக சுவாசம் கொடுத்த மனைவி: நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறிய கணவருக்கு வாயோடு வாயாக சுவாசம் அளிக்க முயன்ற மனைவி ஒருவரின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.. மேலும் அவரது முயற்சி பலனளிக்காமல் கணவர் இறந்து போன சோக நிகழ்வு நடந்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்ரா பகுதியை சேர்ந்த ரவி சிங்கால் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு உள்ளார். உடனடியாக அவரது மனைவி ரேணு சிங்கால் தனது கணவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். 

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மூச்சுத் திணறல் அதிகமானதால் வாயோடு வாய் வைத்து தனது கணவருக்கு ஆக்சிஜன் கொடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மருத்துவமனை செல்லும் முன்னரே அவர் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

More News

பிக்பாஸ் முகின் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் வெளிவந்த செய்தியை

ஆக்சிஜன் வாங்க ரூ.40 லட்சம் கொடுத்த ஆஸ்திரேலிய ஐபிஎல் வீரர்: குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்படுவதன் காரணமாக ஆக்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆக்சிஜன் வாங்குவதற்கு பலர் நிதி உதவி செய்து வருகின்றனர்

கீர்த்தி சுரேஷின் வேற லெவல் ஸ்டைலிஷ் லுக்: இணையத்தில் வைரல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பதும் தெரிந்ததே 

ஸ்டெர்லைட்டை தவிர வேறு நிறுவனங்களே இல்லையா? கமல்ஹாசன் கேள்வி

ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதித்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தவிர ஆக்சிஜன் தயாரிப்பதற்கு வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?

அடுத்து 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு...! முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு, முழு ஊரடங்கு என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.