close
Choose your channels

'பிகில்' படம் குறித்து அர்ச்சனா கல்பாதியின் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

Friday, October 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரித்த விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் உச்சகட்ட வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் ஓபனிங் வசூல் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் ’பிகில்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமும் சென்னையின் எப்சி கால்பந்து அணியில் இணைந்து உள்ளதை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் சென்னையின் எப்சி ஆகிய பெயர் கொண்ட ஜெர்ஸியை அவர் அறிமுகம் செய்துள்ளார்.

மேலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஜெர்சியை அர்ச்சனா கல்பாத்தி சகோதரி ஐஸ்வர்யா கல்பாத்தி அவர்களும், சென்னையின் எப்சி ஜெர்சியை அந்த அணியின் பயிற்சியாளர் ஜான் கிரகரி அவர்களும் கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த டுவீட்டில் அவர் தனது சகோதரியை ‘சிங்கப்பெண்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.