close
Choose your channels

பெப்சி தொழிலாளர்களுக்காக 'பிகில்' தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய தொகை

Monday, April 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். இவர்களுக்கு உதவி செய்திடும் வகையில் நடிகர் நடிகைகள் தாராளமாக நிதி உதவி அளிக்கவேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் கேட்டுக் கொண்டார்.

ஆர்கே செல்வமணியின் வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்பட பல நடிகர்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்தனர். அதேபோல் நயன்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகளும் பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’பிகில்’ உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து ரூபாய் 15 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்காக நிதி உதவி செய்துள்ளனர் இதனையடுத்து பெப்சி தொழிலாளிகள் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.