இணைந்தது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள். பாஜக உற்சாகம்

  • IndiaGlitz, [Thursday,June 22 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த இரு அணிகளும் கட்சி ரீதியில் இன்னும் இணையவில்லை என்றாலும் பாஜகவின் குடியரசுதலைவர் வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதில் ஒரே முடிவை எடுத்துள்ளது.

நேற்று இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு, ஆதரவு அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணியும் அறிவித்துள்ளது.

அதிமுகவின் இரு அணிகளும் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளதால் அவருடைய வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே பாஜக உற்சாகம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

More News

ரஜினியின் 'காலா' பட செட்டில் திடீர் விபத்து! ஒருவர் பரிதாப பலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து பிற நடிகர்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது...

பார்வையற்ற மாணவர்களை பறக்க வைத்த கபாலி-பைரவா நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', தளபதி விஜய் நடித்த 'பைரவா' படங்கள் உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் மைம்கோபி பார்வையற்ற மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்து அவர்களுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார்....

விஜய்யின் சகோதர சகோதரி செண்டிமெண்ட் படங்கள்

இளையதளபதி விஜய் பேசும் வசனங்கள் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது 'அண்ணா' என்பது தான்.

ஸ்ரேயா ரெட்டியின் 'அண்டாவ காணோம்' இசை, டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த 'திமிறு', பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்', தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி...

கார்த்திக் சுப்புராஜ் - பிரபுதேவா படத்தின் நாயகி இவரா?

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படம் ஒன்று சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது...