சசிகலா நடவடிக்கைக்க்கு எதிர்ப்பு. கூண்டோடு ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகிகள்

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அணி, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணி என இரண்டு அணிகளாக அதிமுக தற்போது செயல்பட்டு வருகிறது. யார் ஆட்சியை பிடிப்பது என்ற பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒம்சக்தி சேகர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா நீக்கினார்.
சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லித்தோப்புத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். மேலும் புதுச்சேரி மாநில மருத்துவ அணி நன்னன் தலைமையிலான உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் புதுச்சேரி லெனின் சாலையில் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவினர் சாலைமறியல் செய்து போராட்டம் நடத்தி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஒருபக்கம் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு வலுத்துவருவதாகவும், இன்னொரு பக்கம் சசிகலாவுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து மட்டுமின்றி அதிமுகவின் நிர்வாகிகள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு வலுத்துவருவதாகவும் அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.

More News

ஜெயலலிதா நினைவு இல்லம் ஆகிறது 'வேதா இல்லம்'. விரைவில் அறிவிப்பு?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன், அதிமுக வங்கிக்கணக்கு முடக்கம் ஆகியவை எதிர்த்தரப்பினர் கூட எதிராபாத அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது...

மும்பையில் இருந்து கிளம்பினார் ஆளுனர். சென்னை விமான நிலையத்தில் முதல்வருடன் சந்திப்பா?

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னைக்கு சற்று முன்னர் கிளம்பினார். அவர் இன்று பிற்பகல் 3மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஓபிஎஸ்-க்கு எதிராக போயஸ் கார்டனில் ஆர்ப்பாட்டம். உருவ பொம்மை எரிக்க முயற்சி

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தனது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திய வினாடியில் இருந்து தமிழக அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. ஆட்சியை பிடிக்க சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் தீவிர முயற்சியில் உள்ளனர்...

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அமளி. இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வகையில் உடனடியாக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர்ராவ், தமிழகம் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளி செய்து வருகின்றனர்...

முதல்வர் கடிதம் கிடைத்ததும் வங்கி கணக்கு முடக்கப்படும். பேங்க் ஆப் இந்தியா மேலாளர் அதிரடி

அதிமுக பொருளாளராக இருக்கும் தன்னை நீக்க தற்காலிக பொதுசெயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும், தான் இன்னும் பொருளாளராகவே தொடர்வதால் தன்னுடைய அனுமதியின்றி ஒரு ரூபாய் அதிமுக வங்கிக்கணக்கில் பணம் எடுக்க அனுமதிக்ககூடாது என்றும் அதிமுக பொருளாளரும் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வங்கி அதிகாரிக்க்கு கடிதம் எழுதியிருந்தார