ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. மொத்த எண்ணிக்கை 9 ஆனது

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஏற்கனவே 8 எம்.எல்.ஏக்களும், 12 எம்பிக்களும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் சற்று முன்னர் மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இதனால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

அதிமுகவுக்கு மொத்தம் 134 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அவர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் 133ஆக குறைந்தது. இவர்களில் 9 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். மைலாப்பூர் எம்.எல்.ஏ கே.நட்ராஜ் இன்னும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் சபாநாயகரையும் கழித்துவிட்டால் தற்போது சசிகலா வசம் 122 எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும். ஆனால் 119 எம்.எல்.ஏக்கள் தான் சசிகலா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே 3 எம்.எல்.ஏக்கள் யார்? அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில் இன்னும் ஒருசில நிமிடங்களில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரவுள்ளதால் தீர்ப்புக்கு பின்னர் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சசிகலா வழக்கு தீர்ப்பு எதிரொலி: ஈசிஆரில் போக்குவரத்து திடீர் நிறுத்தம்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உள்பட மூவர் சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 அறிவிக்கப்படவுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-எம்பி. மொத்த எண்ணிக்கை 8-12 ஆனது

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் கடந்த வாரம் ஜெயலலிதா நினைவகத்தில் அரை மணி நேரம் செய்த தியானம், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிவிட்டது

நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள் நிலையில் இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய தமிழக மக்கள் மட்டுமின்றி நாடே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றது.

இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஓபிஎஸ்-ராகரா லாரன்ஸ் சந்திப்பு

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு என்று விடை கிடைக்கும் என்று தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இரு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக தலைவர்கள் சசிகலாவுக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நாளை தீர்ப்பு உறுதி. அதிகாரபூர்வமான தகவல்

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை காலை 10.30 தீர்ப்பு வெளிவரவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது...