அதிமுகவின் இரு அணி இணைப்பின் தாமதத்திற்கு காரணம் யார்? கருணாஸ்

  • IndiaGlitz, [Saturday,May 06 2017]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் 122 எம்.எல்.ஏக்களில் ஒருவரான நடிகர் கருணாஸ், அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றும் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகாலம் பூர்த்தி செய்தால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 'அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே என்விருப்பம். ஜெயலலிதா வளர்த்த கட்சி இரண்டாகப் பிளவுபடக்கூடாது. ஆட்சி நான்கு ஆண்டுகள் பூர்த்தியானால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையும். தற்போது நடக்கும் சம்பவங்கள், ஜெயலலிதா எண்ணத்துக்கு மாறாக உள்ளன. 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற வாக்குப்படி நடந்துகொள்ள வேண்டும்'
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் மாறி மாறி கூறி தெரிவித்து வரும் கருத்துக்களே காரணம்' என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக பல நலத்திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி, மக்கள் மனங்களில் நிறைந்திருக்கின்றார். தொடர்ந்து அம்மாவின் ஆட்சியை அனைவரும் இணைந்து நடத்தி காண்பித்தால்தான் அவருடைய ஆத்மா சநதியடையும். இரு அணிகளையும் இணைக்கும் அந்த புனிதமான பணியில், அதிமுக கூட்டணி இயக்கமாகிய முக்குலத்தோர் புலிப்படை தன்னை இணைத்து கொண்டு, பணியாற்றும் என்றும் கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நிர்பயா தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவகல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்து ஒன்றில் ஆறு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் மரணம் அடைந்தார்.

தமிழ், தெலுங்கை அடுத்து வங்க மொழியிலும் சாதனை புரிந்த ஜெயம் ரவி படம்

கடந்த 2015ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் 'தனி ஒருவன்.

நடிகர் சங்க கட்டிடம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி சாலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி குடியிருப்பு வாசிகளான அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் ஆகியோர் இணைந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம்.

நயன்தாராவின் திடீர் போர்ச்சுக்கல் பயணம் ஏன்?

கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு அவர் திடீரென போர்ச்சுக்கல் கிளம்பி சென்றார். அவர் நீண்டகாலமாக தாமதமாகிக்கொண்டிருந்த தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக போர்ச்சுக்கல் சென்றுள்ளதாக தெரிகிறது...

ஒரே மாதத்தில் முடிவடையும் ஜீவா படத்தின் படப்பிடிப்பு

அட்லி தயாரிப்பில் ஜீவா நடித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு 'கீ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது...