ஓபிஎஸ் அவர்களுக்கு புதிய பதவி: ஈபிஎஸ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,August 21 2017]

அதிமுக தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு சற்றுமுன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அணிகள் இணைப்பின் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் அவர்கள், 'நாம் அனைவரும் ஜெயலலிதா என்ற ஒருதாய் மக்கள். நம்மை யாராலும் பிரிக்க முடியாது. என மனதில் இருந்த பாரம் இன்றுடன் குறைந்துவிட்டது.
ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க இன்று இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. 45 ஆண்டுகாலம் வரலாறு கொண்ட இந்த இயக்கத்தில் இடையில் ஒரு சிறு பிரிவு ஏற்பட்டாலும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்களின் சண்டைக்கு பின் சமாதானமாக இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது' என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள இந்த இணைப்பு வலுவை சேர்க்கும் என்றும் இதுவரை நிகழ்ந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த இணைப்பு இருந்ததாகவும், இனி ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும் முதல்வர் ஈபிஎஸ் பேசினார். அதுமட்டுமின்றி கேபி முனுசாமி துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

More News

இவர்கள் இணைவதால் மக்களுக்கு என்ன பயன்? பிரபல நடிகை கேள்வி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக, ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ளது.

இன்று 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

அதிமுகவின் இரு அணிகள் தற்போது இணைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இந்நாள் முதல்வர் ஈபிஎஸ் அவர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ள நிலையில் ஆளுனர

தமிழன் தலையில் கோமாளிக்குல்லா! கமல்ஹாசனின் டுவீட் எதை குறிக்கின்றது

அதிமுகவின் இரு அணிகளாக செயல்பட்டு கொண்டிருந்த ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் இன்று அதிகாரபூர்வமாக இணையவுள்ளன.

ஓவியாவை பிக்கப் செய்ய முயற்சித்தாரா வையாபுரி?

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும்.

காமெடி நடிகர் செந்தில் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

தமிழ் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகாலமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் செந்தில் ஒருசில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.