close
Choose your channels

மகள் பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடும் மணிரத்னம் பட நடிகை!

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

இந்தியச் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்துவரும் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய செல்ல மகளின் 10 ஆவது பிறந்த நாளை நேற்று மாலத்தீவில் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.

முன்னாள் உலகஅழகியான நடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “இருவர்“ திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த இவர் தனது நடிப்பு மற்றும் அழகால் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தனது அறிமுக இயக்குநர் மணிரத்னத்தின் “ராவணன்“ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவர் தற்போது மீண்டும் “பொன்னியின் செல்வன்“ படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடி தங்களது மகள் ஆராத்யாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து Kuch Naa Kaho, Umrao Jaan, Dhoom 2, Dhaai Akshar Prem ke, Sarkar Raj, Raavan, Guru, Bunty Aur Babli போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த 2007 ஏப்ரல் 20 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு 2011 நவம்பர் 16 ஆம் தேதி ஆராத்யா பிறந்தார்.

தற்போது மாலத்தீவு சென்றுள்ள நடிகை ஐஸ்வர்யா – அபிஷேக் பச்சன் இருவரும் தங்களது மகள் ஆராத்யாவின் 10 ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். மேலும் இந்த கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஆராதியாவிற்கு வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.