மணிரத்னம் படத்தில் ஜோதிகாவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நாயகி

  • IndiaGlitz, [Friday,September 08 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, துல்கர் சல்மான் உள்பட நான்கு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சலீப் அலிகான் மகள் சாரா அலிகான் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் ஜோதிகாவை அடுத்து மேலும் ஒரு நாயகி இந்த படத்தில் இணைந்துள்ளதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. அவர்தான் 'தர்மதுரை', 'மனிதன்', 'காக்கா முட்டை' உள்பட பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ். மணிரத்னம் இயக்கத்தில் முதன்முதலில் நடிக்கவுள்ள ஐஸ்வர்யாவுக்கு இந்த வாய்ப்பு மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் மேலும் சில முக்கிய நட்சத்திரங்கள் இணையவுள்ளதாகவும், அதுகுறித்த செய்தி விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

விஜய்யால் ஏற்பட்ட போலீஸ் கனவு: ஒருநாள் அதிகாரியான மனவளர்ச்சி குன்றிய இளைஞர்

21 வயது ஸ்டீபன் என்ற இளைஞர் மனவளர்ச்சி குன்றிய நிலையில் தளபதி விஜய் மற்றும் சுரேஷ்கோபி படங்கள் பார்த்ததின் விளைவால் தானும் ஒருநாள் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டார்...

ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மொட்ட சிவா கெட்ட சிவா' மற்றும் 'சிவலிங்கா'..

'வேலைக்காரன்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

சினிமாவை மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த ஜிஎஸ்டி

மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தியது...

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் ஜோதிகா

ஜோதிகா நடித்துள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது...