close
Choose your channels

தனுஷின் பிரிவிற்கு பின் ஐஸ்வர்யாவின் முதல் வேலை இதுதான்: வைரல் புகைப்படம்!

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இருந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் தனுஷின் பிரிவிற்கு பின் ஐஸ்வர்யா செய்த முதல் வேலை என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் ஐஸ்வர்யா தன்னுடைய அடுத்த பணிகளில் தீவிரமாக உள்ளார்.

ஏற்கனவே ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்க இருப்பதாகவும் இந்த ஆல்பம் குறித்த ஆலோசனையில் தயாரிப்பு நிறுவனத்துடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டம் குறித்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் நடிப்பவர்கள், இசை அமைப்பவர்கள் குறித்த ஆலோசனை செய்யப்பட்டதாகவும் விரைவில் இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் தற்போது ’வாத்தி’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனுஷூம் ஹைதராபாத்தில் தான் உள்ளார் என்பதும் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.