close
Choose your channels

ஐஸ்வர்யாராய், ஆராதனாவுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

Sunday, July 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரனோ பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்

இதனையடுத்து அமிதாப் குடும்பத்தில் உள்ள ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர்களுக்கு முதல்கட்ட கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்கள் மூவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் அமிதாப் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதில் அவர்கள் இருவருக்கும் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் பச்சன் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.