close
Choose your channels

'PS' படத்தை பான் இந்தியா படமாக எடுக்க முடியாது என்று கூறினார்கள், ஆனால்.. ஐஸ்வர்யா லட்சுமி

Thursday, March 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பேசியதாவது:

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கனமான கேரக்டரை கொடுத்த மணிரத்னம் சார் மற்றும் லைகா நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

பொதுவாக ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக எடுக்க முடியாது என்றும் அந்த கதையில் ஒரு நேட்டிவிட்டி இருக்கிறது என்று தான் பலர் கூறினார்கள். ஆனால் அதை பொய்யாக்கி இயக்குனர் மணிரத்னம் அவர்கள் அனைத்து தரப்பினர்களும் பார்க்கும் வகையில் இந்த படத்தை எடுத்துள்ளார். அது தான் மணிரத்னம் சார். இந்த படத்தின் கேரக்டர்களை அப்படியே ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விஷுவல் அனுபவத்தை கொடுத்துள்ளார்

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு டெக்னீஷியன்களும் ஒவ்வொரு நடிகர்களும் அதிகபட்சமாக தங்களது உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் நாம் எல்லோருடைய இதயத்தில் தொடும் வகையில் இருக்கும். ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதல் பாகத்தைக்கு நீங்கள் ஆதரவு கொடுத்தது போலவே இந்த இரண்டாம் பாகத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.