ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானதா? ரசிகர்கள் அதிர்ச்சி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதியதாகவும், இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மும்பையில் உள்ள ஒரு பிசியான சாலையில், ஐஸ்வர்யா ராயின் கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பேருந்து அந்த காரின் மீது லேசாக மோதியதாக தெரிகிறது. இதனை அடுத்து, கார் டிரைவர் இறங்கி வந்து காரின் சேதத்தை சோதனை செய்துள்ளார். பெரிய சேதம் எதுவும் இல்லை என்பதைக் கண்டதும், அவர் காரை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. காரும் பேருந்தும் தனித்தனி வழிகளில் சென்று விட்டன.
ஆனால், இது குறித்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், "ஐஸ்வர்யா ராய் கார் விபத்துக்குள்ளாகியது" என்றும் "பேருந்து அவரது காரின் மீது மோதி விட்டது" என்றும் பதிவுகள் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையில், விபத்து நடந்த போது காரில் ஐஸ்வர்யா ராய் அல்லது அவரது குடும்பத்தினர் யாரும் இல்லை என்றும், டிரைவர் மற்றும் பாதுகாவலர்கள் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை விளக்கம் அளிக்கையில், "ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து லேசாக மோதியது. ஆனால் எந்தவித சேதமும் இல்லை. இதையடுத்து, இரு தரப்பும் சமாதானமாக பேசி, அவரவர் வழியில் சென்றுவிட்டனர். மற்றபடி, ஐஸ்வர்யாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த தகவல் இணையத்தில் பரவி வரும் நிலையில், "ஐஸ்வர்யா ராய் நலமாக இருக்கிறாரா? பாதுகாப்பாக இருக்கிறாரா?" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments