close
Choose your channels

சேல்ஸ்கேர்ள் ஆக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

Thursday, March 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சேல்ஸ்கேர்ள் கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடசென்னை பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், அவரது கேரக்டர் கிட்டத்தட்ட ‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி கேரக்டர் போன்று புத்திசாலித்தனமான கேரக்டர் என்றும், ஆனால் அதே நேரத்தில் அரவிந்த்சாமி போல் நெகட்டிவ் கேரக்டரில் இல்லாமல் பாசிடிவ் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருவதாகவும் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்ததால் தான் அவரை தேர்வு செய்ததாக இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘லாக்கப்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.