close
Choose your channels

புயலால் காரில் செல்ல முடியாத நிலை: சமயோசிதமாக சிந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

Wednesday, November 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் அவசரமாக ஹைதராபாத் செல்ல இருந்த நிலையில் புயல் பாதிப்பு காரணமாக எந்த போக்குவரத்தும் இல்லாத நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருந்தார். ஆனால் வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு காரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கனமழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக காரில் செல்ல முடியாத நிலை ஏற்படவே விமானத்தைப் பிடிக்க முடியுமா? என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது.

உடனடியாக சமயோசிதமாக யோசித்த ஐஸ்வர்யா ராஜேஷ், விமான நிலையம் செல்ல மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். மேலும் சென்னையை பொறுத்தவரை விமான நிலையம் செல்வதற்கு மெட்ரோ ரயில் தான் சிறந்தது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.