close
Choose your channels

'கனா' வெற்றி விழாவில் சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த பிரபல நடிகை

Wednesday, January 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்ற 'கனா' வெற்றி விழாவில் பேசிய படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், 'நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடி வருவதாகவும், ஆனால் இந்த விழா அப்படி இல்லை என்றும், இது உண்மையான வெற்றி விழா’ என்றும் கூறினார். ஐஸ்வர்யாவின் இந்தா பேச்சை நடிகர் சத்யராஜ் பாராட்டினார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு ஒருசில பெரிய நடிகர்களின் ரசிகர்களை புண்படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஐஸ்வர்யாவை பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஒருசிலர் ஒருசில குறிப்பிட்ட படங்களை குறிப்பிட்டு ஐஸ்வர்யா இந்த படத்தைத்தான் குறிப்பிட்டு சொன்னதாக கூறினர்.

இந்த நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். 'கனா' வெற்றி விழாவில் அவ்வாறு பேசியது ஒரு நகைச்சுவைக்காகத்தான் என்றும், நான் எந்த படத்தையும் குறிப்பிட்டோ அல்லது யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்றோ அவ்வாறு பேசவில்லை என்றும், ஒரு திரைப்படத்தை உருவாக்குவது எவ்வளவு கஷ்டம் என்று தனக்கு தெரியும் என்றும், அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் கூறினார். தன்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.