close
Choose your channels

மனோரமா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கணும்: இளம் நடிகையின் ஆசை

Sunday, August 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் சகாப்தம் ஆச்சி மனோரமா என்றால் அது மிகையாகாது. 1000 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த அவரது சாதனையை வேறு ஒரு நடிகையை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகமே. இந்த நிலையில் மனோரமாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஆசை என தமிழ் இளம் நடிகை ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். 

தமிழ் திரையுலகில் நல்ல கேரக்டர்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கடந்த 10 ஆண்டுகளில் 25 திரைப்படங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் 25-ஆவது திரைப்படமான ’பூமிகா’ என்ற படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியபோது ’கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன் அவ்வாறு அமைந்த படங்களில் ஒன்றுதான் ’பூமிகா’. இந்த படத்தில் எனக்கு துணிச்சலான கேரக்டர். இயக்குனர் ரதீந்திரன் ஏற்கனவே எனக்கு நல்ல நண்பர். மிகவும் திறமையானவர். இந்த படத்தை 35 நாட்களில் ஊட்டியில் முடித்தோம் என்று கூறியுள்ளார். 

மேலும் வரலாற்று திரைப்படங்களில் நடிக்க ஆசை என்றும் அதே போல் மறைந்த நடிகை மனோரமாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாராவது எடுத்தால் அவரது கேரக்டரில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். தனது கனவு விரைவில் நிறைவேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.