close
Choose your channels

ஆரம்பித்த இடத்திலேயே முடிந்தது..'லால் சலாம்' படப்பிடிப்பு குறித்து ஐஸ்வர்யா ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு..!

Monday, August 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய இடத்திலேயே முடிந்தது என நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்த ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

திருவண்ணாமலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் திருவண்ணாமலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளதாவது:

கடந்த நான்கு மாதங்களாக எங்கள் குழுவினர் மிகவும் கடினமாக உழைத்து இந்த படப்பிடிப்பை முடித்துள்ளோம். குறிப்பாக கடைசி 22 மணி நேரங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நிறுத்தி உள்ளோம். என்னுடைய ’லால் சலாம்’ குடும்பத்திற்கு எனது நன்றி.
திருவண்ணாமலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி அதே இடத்தில் முடிவடைந்தது என்பது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. எல்லாம் உங்கள் ஆசியால்தான். ’லால் சலாம்’ படத்தின் அடுத்த கட்ட பணிக்கு நாங்கள் செல்கிறோம் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.