திரைப்படமாகிறது 'கால்வான்' பள்ளத்தாக்கு மோதல்: பிரபல நடிகர் தயாரிக்கின்றார்!

சமீபத்தில் இந்திய சீன எல்லையான ‘கால்வான்’ பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் உயிரிழப்புக்கள் அதிகம் என்று கூறப்பட்டாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை 

இந்த நிலையில் கால்வாய் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்னர் இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து எந்த பொருளும் இனி இறக்குமதி செய்யப் போவதுமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது இதனால் இந்திய சீனா இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இந்த நிலையில் ‘கால்வான்’ பள்ளத்தாக்கு சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே ஒருசில செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது 

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் ‘கால்வான்’ பள்ளத்தாக்கு குறித்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் இந்திய சீன ராணுவ வீரர்களின் மோதல் காட்சிகள், 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் ஆகியவை முக்கியத்துவமாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த படத்தில் அஜய் தேவ்கான் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது 

ஏற்கனவே ‘கால்வான்’ பள்ளத்தாக்கு மோதல் சம்பந்தமான படத்தில் நடிக்க அக்சய்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அஜய் தேவ்கான் இந்த படத்தை தயாரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கமல்ஹாசனின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ஜிவி பிரகாஷ்!

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை

வாழ்த்து கூறிய பாஜக பிரபலத்திற்கு 'தேங்க்யூ அங்கிள்' சொன்ன காயத்ரி ரகுராம்

திமுக, அதிமுக ஆகிய இரண்டு முன்னணி திராவிட கட்சிகளுக்கு இடையே கட்சியை வளர்க்க பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சி செய்து வருகிறார்.

விஜய்யின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் வைரல் 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி அதனிடம் இருந்து மக்களை பாதுகாக்க

தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் நள்ளிரவில் கைது: கொலை வழக்கும் பதிவு

சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரணம் குறித்த வழக்கில் ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோர்

நயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நடிகர் நடிகைகள் போகவே மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குவது கடந்த சில வருடங்களாகவே ஒரு வழக்கமாக உள்ளது