விக்ரமின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,May 20 2019]

சீயான் விக்ரம் நடிக்கவுள்ள 58வது படத்தின் அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இதுகுறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

'விக்ரம் 58' திரைப்படத்தினை இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'டிமாண்டி காலனி' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். தனது முந்தைய இரண்டு படங்கள் போலவே இந்த படமும் ஒரு த்ரில் படமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் இந்த படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.