'டிமாண்டி காலனி' இரண்டாம் பாகம்: ஆனால் மிகப்பெரிய மாற்றம்!

  • IndiaGlitz, [Monday,May 23 2022]

அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி’ வெளியாகி ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ’டிமான்டி காலனி’ திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆனதை அடுத்து நேற்று படக்குழுவினர் இதனை கொண்டாடினார்

இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைத்தளத்தில் ’டிமாண்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கப் போவதில்லை என்றும் அவருடைய உதவியாளர் வெங்கி வேணுகோபால் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை எழுதுவதோடு இந்த படத்தை அஜய் ஞானமுத்து தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

’டிமாண்டி காலன்’ முதல் பாகத்தில் அருள்நிதி இறந்துவிடுவதோடு படம் முடிந்துவிடும். ஆனால் அருள்நிதியை வைத்து மீண்டும் எப்படி இரண்டாம் பாகம்? என்ற கேள்விக்கு ‘அது சஸ்பென்ஸ் என்றும் ஆனால் முதல் பாகத்தில் நடித்த அருள்நிதி உள்பட முக்கிய கேரக்டர்களும், மேலும் சில புதிய கேரக்டரில் சிலரும் நடிக்கவுள்ளனர் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்றும் அஜய்ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

More News

சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபலம்: கசிந்தது 'விக்ரம்' பட ரகசியம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்ததை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த போதிலும் அந்த தகவல் சமீபத்தில் கசிந்தது என்பதும் அதனை அடுத்து படக்குழுவினர்களே

கமல்ஹாசனின் 'விக்ரம்' ரன்னிங் இடம் இவ்வளவு அதிகமா? செம விருந்து காத்திருக்கு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

விக்ரம், சமந்தாவுடன் மோத முடிவு செய்த விஷால்: அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரம் மற்றும் நடிகை சமந்தா ஆகியோர்களின் படங்கள் ரிலீசாகும் தினத்தில் தனது படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு காமெடி நடிகருடன் டான்ஸ் ஆடிய பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகன் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அவருடன் நெல்சன் குடும்பத்தினர், கவின் உள்பட பலரும் சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே .

ரொமான்ஸ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதிஷங்கர்? மீண்டும் கிராமத்து கேரக்டரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடித்த 'விருமன்' என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் அவர் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்து உள்ளார்