close
Choose your channels

அஜித்தும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர் தான்: சுசீந்திரன்

Wednesday, November 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் உடலுக்கு திரையுலகமே ஒட்டுமொத்தமாக திரண்டு மலரஞ்சலி செய்து வரும் நிலையில் இயக்குனர் சுசீந்திரன், அசோக்குமாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் மரணமே கடைசியாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் நடிகர் அஜித் உள்பட பலரும் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அஜித் ரசிகர்களுக்கு நான் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொல்ல போகிறேன். 'நான் கடவுள்' படத்தின் சமயத்தில் அஜித் அவர்களே இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.ஒரு முதல்வர் இருக்கும் மேடையிலேயே தன்னை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர் என்று தைரியமாக கூறிய அஜித் இதனையும் மறுக்க மாட்டார்.. இயக்குனர் லிங்குசாமி உள்பட பலர் இந்த கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்டை முறையில் விசாரித்தால் பலர் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரும்' என்று கூறினார்.

இதேபோல் கந்துவட்டி கொடுமையை சரிசெய்ய அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்கும் என்று இயக்குனர் ஜனநாதன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.