close
Choose your channels

திடீரென வெளிநாடு கிளம்பிய அஜித்-மகிழ்திருமேனி.. என்ன காரணம்?

Saturday, June 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அஜித் மற்றும் மகிழ் திருமேனி ஆகிய இருவரும் வெளிநாடு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த தினத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ’விடாமுயற்சி’ என்ற படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த படம் தொடங்குவதில் ஒரு சில சிக்கலும் இருப்பதாக வதந்திகள் கிளம்பியது.

இந்த நிலையில் அஜித் மற்றும் மகிழ் திருமேனி ஆகிய இருவரும் ஒரு சிறிய ஆரம்பகட்ட பணிகளுக்காக வெளிநாடு சென்றிருப்பதாகவும் வெளிநாட்டில் இந்த படத்திற்கான போட்டோஷூட் எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க இருப்பதாகவும் வெளிநாட்டு லொகேஷன்கள் அனைத்தும் பார்த்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித், மகிழ் திருமேனி ஆகிய இருவரும் வெளிநாடு செல்லும் போது விமான நிறுவன ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து இருவரும் வெளிநாடு சென்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.