திடீரென வெளிநாடு கிளம்பிய அஜித்-மகிழ்திருமேனி.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,June 03 2023]

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அஜித் மற்றும் மகிழ் திருமேனி ஆகிய இருவரும் வெளிநாடு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த தினத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ’விடாமுயற்சி’ என்ற படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த படம் தொடங்குவதில் ஒரு சில சிக்கலும் இருப்பதாக வதந்திகள் கிளம்பியது.

இந்த நிலையில் அஜித் மற்றும் மகிழ் திருமேனி ஆகிய இருவரும் ஒரு சிறிய ஆரம்பகட்ட பணிகளுக்காக வெளிநாடு சென்றிருப்பதாகவும் வெளிநாட்டில் இந்த படத்திற்கான போட்டோஷூட் எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க இருப்பதாகவும் வெளிநாட்டு லொகேஷன்கள் அனைத்தும் பார்த்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித், மகிழ் திருமேனி ஆகிய இருவரும் வெளிநாடு செல்லும் போது விமான நிறுவன ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து இருவரும் வெளிநாடு சென்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்தியாவை புரட்டி போட்ட ரயில் விபத்து.. ஒடிசா விரைகிறார் அமைச்சர் உதயநிதி..!

 20 ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் நிகழும் மோசமான ரயில் விபத்தாக நேற்று நடந்த கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக

மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - ஷங்கர்? '3.0' உருவாகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்

அஜித், விஜய்,சூர்யா நடிகையின் கணவருக்கு ரூ.8000 கோடி சொத்து மதிப்பா?

அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையின் கணவருக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டூ பீஸ் பிகினி.. மாலத்தீவு கடற்கரையில் மஞ்சள் மோகினி ரகுல் ப்ரீத் சிங்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் மஞ்சள் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று சிறப்பான நாள்… 'த்ரோபேக்' புகைப்படம் வெளியிட்ட போனி கபூர்!

இந்திய சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருந்துவரும் போனி கபூர் தனது மனைவியும் மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.