சிவகார்த்திகேயன் படத்தில் அஜித் பட வில்லன்

  • IndiaGlitz, [Tuesday,July 11 2017]

அஜித், ஆர்யா, நயன்தாரா நடித்த 'ஆரம்பம்' படத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதியாக நடித்த மகேஷ் மஞ்ச்ரேக்கரை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக நடித்து வருவதாகவும், இந்த கேரக்டருக்கு அவருடைய தோற்றம் கச்சிதமாக பொருந்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பகத் பாசிலுடன் இவருக்கு உள்ள தொடர்பு குறித்து ஒரு டுவிஸ்ட் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

'ஆரம்பம்' படத்திற்கு பின்னர் மீண்டும் நயன்தாரா நடிக்கும் படத்தில் மகேஷ் மஞ்ச்ரேக்கர் நடிக்கின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ராம்ஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

திலீப் கைது எதிரொலி: நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு

பிரபல நடிகர் திலீப், நடிகை பாவனா வழக்கில் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

உண்மை வென்றது! பாவனா சகோதரரின் நெகிழ்ச்சியான அறிக்கை

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் பிரபல நடிகர் திலீப் இருப்பதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சாகருப்பு ரீ-எண்ட்ரியா?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பலவிதமான சர்ச்சைகளுக்கு ஆளானாலும் கோடிக்கணக்கானோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக பிரபலம் அடைந்துவருகிறது...

நான் அப்பாவி, அதனால் எனக்கு பயமில்லை: கைதான திலீப் பேட்டி

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்குள்ளான வழக்கில் நேற்று அதிரடியாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்

திருமணத்திற்கு முன் கேட்ட 2 கேள்விகள்: ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியின் முதல் பேட்டி

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முதன்முதலில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி, தனது கணவரிடம் முதன்முதலில் கேட்ட இரண்டு கேள்விகள் மற்றும் அவரது குணங்கள் குறித்து மனம் திறந்து கூறினார்...