close
Choose your channels

சென்னையில் ஐபிஎல் போட்டியை கண்டு ரசிக்கும் அஜித் குடும்பம்.. க்யூட் புகைப்படம்..!

Sunday, May 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியை அஜித் குடும்பம் கண்டு ரசிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் ஆறில் வெற்றியும் ஆறில் தோல்வியும் அடைந்துள்ளது. மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி செல்லும் நிலை உள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 141 ரன்கள் எடுத்த நிலையில் 142 என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் மைதானத்திற்கு வந்து போட்டியை கண்டு ரசிப்பார்கள் என்பதும் சிஎஸ்கே அணியினருக்கு கரகோஷத்தை அளிப்பார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகிய மூவருமே இன்று சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியை நேரில் காண வந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜித் குடும்பத்தினர் மட்டுமின்றி தமிழ் திரை உலகின் பல பிரமுகர்கள் இன்றைய போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.