சவுதாம்ப்டனில் சேட்டையைக் காட்டிய அஜித் ரசிகர்கள்… உலக அளவில் வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,June 21 2021]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி கிரிக்கெட் போட்டி தற்போது சவுதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியிலும் அஜித் ரசிகர்கள் “வலிமை“ படத்தின் அப்டேட் கேட்டு பதாகையை கையில் ஏந்தி உள்ளனர். இதைப் பார்த்து நியூசிலாந்து வீரர்கள் குழம்பிபோன சம்பவம் நடைபெற்று உள்ளது. இதனால் “வலிமை” படம் குறித்த தகவல் தற்போது சர்வதேச அளவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியிருக்கிறது. அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 49 ரன்களை எடுத்துள்ளார். நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார்.

இதைத் தொடர்ந்து நேற்று 3 ஆவது நாளாக களம் இறங்கிய நியூசிலாந்து அணி 101 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்துள்ளது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸ் மற்றும் ரோஸ் டெயிலர் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்தப் போட்டிக்கு இடையே அஜித் ரசிகர்கள் “வலிமை” படத்தின் அப்டேட்டை கேட்டு கையில் பதாகையை ஏந்தியுள்ளனர். இதைப் பார்த்த நியூசிலாந்து வீரர்கள் என்னவென்று தெரியாமல் குழம்பி போன சம்பவமும் நடைபெற்றது.

போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் “வலிமை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் பிறந்தநாளான மே 1 அன்று வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா உக்கிரம் காரணமாக அதை படக்குழு தவிர்த்த நிலையில் மீண்டும் “வலிமை” படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா தொடர்போட்டி, இந்தியத் தொடர் போட்டி, தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எனப்பல இடங்களில் அஜித் ரசிகர்கள் வலிமை அப்பேட் கேட்டு கொண்டு இருக்கும் சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது.

More News

தமிழகத்தில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி...! அதுவும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே...!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளை இன்னும் ஒரு வாரத்திற்கு அரசு நீட்டித்துள்ளது.

தாயுமானவருக்கு தந்தையர் நாள் வாழ்த்துகள்: கனியின் வைரல் புகைப்படம்!

இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நதியா, தனுஷ், விஷ்ணு விஷால், வரலட்சுமி சரத்குமார், பிரசன்னா உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள்

25 வருடங்களாக எனக்கு அப்பாவும் இவர்தான்: விஜய் டிவி ஜாக்குலினின் நெகிழ்ச்சியான பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ரக்‌ஷனுடன் கலந்து கொண்டவர் ஜாக்குலின் என்பதும், ரக்‌ஷன் மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக இந்த

இவர் தான் நடிகை நதியாவின் அம்மாவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பிரபல இயக்குனர் பாசில் இயக்கிய 'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன்பின் அவர் ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து

என் முதல் ஹீரோ அப்பா தான்: 'குக் வித் கோமாளி' புகழின் தந்தையர் தின ஸ்பெஷல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி சீசன் 2 மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பதும், இந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் பழைய எபிசோடுகளை