காணாமல் போய் 300 நாளாச்சு: கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு: அஜித் ரசிகர்கள் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,February 26 2024]

அஜித் நடித்த வரும் ’விடாமுயற்சி' படத்தின் அப்டேட் வெளியாகி 300 நாள் ஆகிவிட்டது என்றும் அப்டேட் வெளியிடாத லைக்கா நிறுவனத்தை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அஜித் ரசிகர்கள் திடீரென போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’விடாமுயற்சி'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு குறித்த தகவல்களோ அல்லது படத்தின் மற்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் ’விடாமுயற்சி' படத்தின் அறிவிப்பு வெளியாகி 300 நாள் ஆகிவிட்ட போதிலும் லைக்கா நிறுவனம் இந்த படம் குறித்த எந்த அப்டேட்டையும் தெரிவிக்கவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பலமுறை சமூக வலைதளங்கள் மூலம் ’விடாமுயற்சி' அப்டேட் கேட்டு சலித்து போன அஜித் ரசிகர்கள் தற்போது அதிரடியாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் லைக்கா நிறுவனத்தை காணவில்லை, ’விடாமுயற்சி' டைட்டில் வெளியிட்டு 300 நாள் ஆகிவிட்டது, படத்தோட அப்டேட் என்ன ஆச்சு, கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த போஸ்டர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

பிரதமர் பாராட்டிய பிரியாமணி நடித்த படம்.. வளைகுடா நாடுகளில் தடை..!

நடிகை பிரியாமணி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பிரதமர் மோடி அவர்களும் பாராட்டு தெரிவித்து

அட்லியிடம் இருந்து தான் இதை கற்று கொண்டேன்.. ஷாருக்கான் பதிவுக்கு அட்லி பதில் என்ன தெரியுமா?

'அட்லியிடம் இருந்து தான் இதை நான் கற்றுக் கொண்டேன்' என ரசிகர் ஒருவர் கேள்விக்கு ஷாருக்கான் பதில் அளித்த நிலையில் அட்லி அதற்கு 'உங்களிடம் இருந்துதான் நான் தினம் தினம் பல விஷயங்களை கற்று

என்னால ஏத்துக்கிடவே முடியல.. 50 ரூபாய் செலவுல வேலையில முடிச்சிறாங்க..! ' 'இரவின் நிழல்' நடிகை..!

வெறும் ஐம்பது ரூபாய் சோப்பு போட்டு குளித்து புத்துணர்ச்சி ஆகிவிடுகிறார்கள், ஆனால் நாங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் எங்களால் அந்த மாதிரி ஆக முடியவில்லை

6000 ஆண்டுகளில் நடக்கும் கதை.. கமல்ஹாசன் படம் குறித்து இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் கதை மகாபாரத காலத்தில் தொடங்கி 6000 ஆண்டுகள் நடைபெறும் கதை அம்சம் கொண்டது என்று அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளது

அடுத்தடுத்து விஜய் இயக்குனர்களை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்.. அடுத்த இளைய தளபதியா?

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே விஜய் படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இன்னொரு விஜய் பட இயக்குனரையும் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.