வாட்ச்மேனாக வேலை பார்க்கும் அஜித்தின் 'ஆரம்பம்' பட நடிகர்.. உதவி கிடைக்குமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ‘ஆரம்பம்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் தற்போது வாட்ச்மேன் வேலை பார்த்து வருவதாகவும், அடிப்படை தேவைகளுக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும் கூறப்படும் நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் தீவிரவாத குழுவை சேர்ந்தவராக நடித்தவர் சவி சித்து. லக்னோவை சேர்ந்த இவர் சட்டப்படிப்பு படித்த நிலையில், அதன் பிறகு நாடக துறையில் சேர்ந்து நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் மும்பைக்கு சென்றார்.
அவருக்கு 1995 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு, சின்ன சின்ன வேடங்களில் பல படங்களில் நடித்தார். அப்போதுதான் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ திரைப்படத்தில் தீவிரவாதிகள் குழுக்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் சில வேடங்களில் சில படங்களில் அவர் நடித்தாலும், திறமையான நடிகராக இருந்தாலும், அவரால் திரையுலகில் ஒரு அங்கீகாரம் பெற முடியவில்லை. இதனை அடுத்து, திரையுலகிலிருந்து விலகி, அவர் தற்போது ஒரு கட்டிடத்தின் வாட்ச்மேனாக வேலை செய்து கொண்டிருக்கிறார். குறுகிய காலத்திலேயே அவர் தனது மனைவி, பெற்றோர், உறவினர்களை இழந்து தனிமையாக இருப்பதாக கண்ணீருடன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
வாட்ச்மேன் வேலையில் கிடைக்கும் சம்பளம் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யக்கூட போதவில்லை என்றும், 12 மணி நேரம் வேலை செய்த போதும் தன்னால் தியேட்டருக்கு சென்று ஒரு சினிமா கூட பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனை அடுத்து, சவி சித்துவுக்கு திரையுலக பிரபலங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments