close
Choose your channels

நான் பார்த்த முதல் முகம் நீ: 'வலிமை' பாடலின் முழு வரிகள் இதோ!

Sunday, December 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவனின் அருமையான வார்த்தைகளில், சித் ஸ்ரீராமின் மனதை மயக்கும் குரலில், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகிய இந்த பாடலின் முழு வரிகள் இதோ:

நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே

நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே

சிணுங்கிய போது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக் கொடுத்தாய்
ஆவலோடுதான்

வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்
ஆசையோடு

அம்மா என் முகவரி நீ அம்மா
அம்மா என் முதல் வரி நீ அம்மா
அம்மா என் உயிர் என்றும் நீ அம்மா

நீயே எனக்கெனவே பிறந்தாயே
என் அனைத்தையும் தந்தாயே
என் உலகமே என் தாயே

உன் வார்த்தை எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையிலே என் வாழ்க்கையினை வரைந்து வைத்தாயே

ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே

விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்தாயே
இதற்கான காணிக்கையாய் நான் என்ன தான் தருவேனோ..
அம்மா ... ஓ அம்மா.. அம்மா ஆ ஆ ஆ

அம்மா என் முகவரி நீ அம்மா
அம்மா என் முதல் வரி நீ அம்மா
அம்மா என் உயிர் என்றும் நீ அம்மா

நீயே எனக்கெனவே பிறந்தாயே
என் அனைத்தையும் தந்தாயே
என் உலகமே என் தாயே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.