அஜித்தின் 'விடாமுயற்சி'.. தமிழகத்தில் முதல் நாள் காட்சி எப்போது? தமிழக அரசின் அரசாணை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த 'விடாமுயற்சி’ என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்த படம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகியவற்றில் அதிகாலை காட்சி திரையிடப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
லைகா புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து, "விடாமுயற்சி" என்ற திரைப்படத்திற்கு 06.02.2025 அன்று வெளியாகும் நாள் மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியினை காலை 9.00 மணி முதல் இரவு 2.00 மணி வரை (ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் மட்டும்) திரையரங்குகளில் திரையிட 1955-ம் ஆண்டு, தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 11-ல் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, 1957-ம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் உள்ள 'சி' படிவ நிபந்தனை 14 மற்றும் 14-A-வினை தளர்த்தி, இது குறித்து முன்கூட்டியே உரிமம் வழங்கும் அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட கேளிக்கை வரி அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, அனுமதிக்கலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments