'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா? பரபரப்பு தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,February 19 2020]

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சென்னை படப்பிடிப்பு கடந்த திங்கட்கிழமை முடிந்துவிட்டதாக படக்குழுவினர்கள் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை படப்பிடிப்பின் கடைசி நாளில் அஜித் பைக் சேசிங் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது காயமடைந்ததாகவும் இருப்பினும் அவர் ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின் படப்பிடிப்பை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு முடிவடைந்த பின் அவர் தனது குடும்ப டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்து கொண்டதாகவும் ஒரு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு அவர் மீண்டும் வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இன்னும் ஒருசில நாட்களில் நடைபெற இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது.

மேலும் அஜித் புதிய ஏர்கிராப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் ’வலிமை’ படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்று வெளியான வதந்தியை படக்குழுவினர் மறுத்துள்ளனர். அஜித் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து ஒத்துழைப்பு தருவதாகவும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

'மாஃபியா' உருவாக காரணம் இந்த இருவர்தான்: கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய், ப்ரியா பவானிசங்கர், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'மாஃபியா' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த

இவர்கள் எல்லாம் இப்போது இல்லையே! 'ஹேராம்' பிரபலங்கள் குறித்து கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'ஹேராம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் பூர்த்தியானததை அடுத்து இன்று காலை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில்

"நீ அழகாக இல்லை" என சொல்லி வெளிநாடு தப்ப முயன்ற காதலன்.. திருமணம் முடித்து வைத்த போலீசார்..!

சென்னை அனகாபுத்தூரில் காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலனை பிடித்து திருமணம் செய்து வைத்தனர் போலீசார்.

தன் குட்டியை போல் குரங்கை பார்த்துக்கொள்ளும் நாய்..! வீடியோ.

இருவரும் வருடம் கடந்து பழகும் நண்பர்கள் போல பழகி வரும் இந்த வீடியோ காண்போரை நெகிழ்வுறச் செய்துள்ளது.