இனிமேல் இதுபோல் நிகழாது என நம்புகிறேன்: பத்ம விருது பெற்ற பின் அஜித் பேட்டி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித்துக்கு நேற்று ’பத்ம பூஷன் விருது’ வழங்கப்பட்ட நிலையில், விருது பெற்ற பின்னர் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், பெஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், அரசு தங்களால் இயன்றவரை சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாலும், அவர்களுடன் ’நான் துணையாக நிற்கிறேன்’ என்றும், இது போன்ற செயல்கள் இனிமேல் நிகழாது என நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
’நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இறக்கத்துடன் நடந்து கொள்வோம்’ என பிரார்த்திப்போம் என்று கூறிய அஜித், ’நம்மிடையே உள்ள அனைத்து வேறுபாடுகளையும் மறந்துவிட்டு ஒற்றுமையான ஒரே சமூகமாக வாழ்வோம்’ என்றும் கூறினார்.
’ராணுவத்தை சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். நாம் அனைவரும் அவர்களுக்கு தலை வணங்குகிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாம் இங்கே நிம்மதியாக உறங்கி ஓய்வெடுப்பதற்கு அவர்கள் தங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதே காரணம். அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் அழகான ஒரு வாழ்க்கை அமைய பிரார்த்தனை செய்கிறேன்’ என்று தெரிவித்தார்.
’ஒருவர் ஒருவரை மதித்து நடந்து கொள்ள வேண்டும், ஒவ்வொரு மதத்தையும் மதிக்க வேண்டும். அதேபோல், ஒவ்வொரு சாதிக்கும் மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் நமக்குள் சண்டையிடாமல் இருக்க வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.
அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com