அஜித் ஒரு மகாத்மா: பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி பேட்டி

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி வயதான போட்டியாளராக இருந்தாலும் இளமையான போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சமயோசிதமாக விளையாடி வருகிறார். தந்திரமாகவும் புத்திசாலித்தனமாகவும் அவர் விளையாடி வருவது சக போட்டியாளர்கள் சமாளிக்க முடியாத வகையில் உள்ளது

இந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தியின் பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் அஜித்தின் புகைப்படத்தை காட்டி பேட்டி எடுப்பவர் ஒரு கேள்வி கேட்க, அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி ’அஜித் ஒரு மகாத்மா’ என்றும், மகாத்மா என்ற டைட்டிலுக்கு பொருத்தமானவர் அஜித் மட்டுமே என்றும் கூறினார்
சிலர் செய்கையால் அவர்கள் நல்லவர்கள் என்பது நமக்கு தெரிய வரும். ஆனால் அஜித் வரும்போதே அவரிடம் ஒரு பிரகாசம் ஏற்படும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற வகையில் அவர் முகத்தை பார்த்தாலே அவர் நல்லவர் என்பதை கண்டுபிடித்துவிடலாம்

திரையுலகில் உள்ள யாரிடம் கேட்டாலும் அஜித்தை பற்றி ஒருவர் கூட தவறாக சொல்ல மாட்டார்கள். அவர் பெரிய ஸ்டாராக இருந்தாலும் அவரது எளிமைதான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அஜித்தை நான் ஒரு நிகழ்ச்சிக்காக இயக்கியுள்ளேன். ரேடான் நிறுவனம் தயாரித்த ஒரு தீபாவளி நிகழ்ச்சியின் போது அவரை நான் இயக்கியிருக்கிறேன். அப்போது அவர் என்னிடம் நிறைய பேசியுள்ளார். குழந்தை போல் கள்ளங்கபடம் இல்லாமல் பேசினார்.

மேலும் அவருடன் ஒரு படமும் நான் நடித்துள்ளேன். பின்னர் இரண்டாவதாக ஒரு படத்தில் நாங்கள் இருவரும் நடிக்க ஒப்பந்தமான நிலையில் எங்கள் இருவரையும் அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டனர் என்று அஜித் குறித்த தனது மலரும் நினைவுகளை அந்த பேட்டியில் சுரேஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

கெத்து காட்டிய பாலாஜி, உசுப்பிவிட்ட அர்ச்சனா, பலியாடான வேல்முருகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 23 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சி சுவராசியமாக இருந்தது. ஆரம்பத்தில் அனிதாவின் அழுகை சற்று போரடித்தாலும் அதன்பின் தங்கச்சுரங்கம் டாஸ்க்  

4 மாவட்டங்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க இருப்பதன் காரணமாகவும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது

படுக்கையறை காட்சிகளை நேரலையில் ஒளிபரப்பி சம்பாதித்த கணவர் மீது புகார் அளித்த மனைவி!

இரண்டு மனைவிகளுடன் படுக்கை அறையில் தனிமையில் இருந்த காட்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து இலட்சக்கணக்கில் சம்பாதித்த இளைஞர் ஒருவர் மீது காவல்துறையில்

கோரத்தாண்டவமாடிய அர்ச்சனா: கண்ணீர் விட்டு கலங்கிய பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அர்ச்சனா கிளப்பிவிட்ட ஒரு சிறு பிரச்சனை இன்று மிகப் பெரியதாக வெடித்து கோரத்தாண்டவம் ஆடும் அளவுக்கு ஆகிவிட்டது

கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்!

கல்லூரி மாணவி ஒருவர் அவர் படித்து வந்த கல்லூரி வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது