என்னை விட இதற்கு சரியான ஆளு அஜித் மட்டும் தான் : சூப்பர் ஸ்டார்

  • IndiaGlitz, [Wednesday,April 27 2016]

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், வேதிகா நடிப்பில் பி.வாசு இயக்கிய 'ஷிவலிங்கா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியதால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பி.வாசு திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் சிவராஜ்குமார் நடித்த கேரக்டரில் நடிக்க அவர் ரஜினியிடம் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் தான் 'கபாலி' மற்றும் '2.0' படங்களில் பிசியாக இருப்பதாலும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக கூறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.


மேலும் இதுபோன்ற மாஸ் கேரக்டருக்கு தற்போதைய நிலையில் அஜித் மட்டுமே பொருத்தமானவர் என்றும் பி.வாசுவிடம் ரஜினி பரிந்துரை செய்தாராம். ஏற்கனவே அஜித் நடித்த 'பரமசிவம்' படத்தை இயக்கியுள்ள பி.வாசு, மீண்டும் ஒருமுறை அஜித்துடன் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் வரும் ஜூன் மாதம் முதல் அஜித் கலந்துகொள்ளவுள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் விஷ்ணுவர்தன் - பாலகுமாரன் இணைந்து எழுதிவரும் சோழர் கால சரித்திர படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. எனவே 'ஷிவலிங்கா' ரீமேக்கில் நடிக்க அஜித் ஒப்புக்கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More News

சூர்யாவுக்கு அடுத்து அல்லு அர்ஜுன் தான். '24' விக்ரம்குமார்

'ஆத்ரேயா' உள்பட மூன்று வித்தியாச வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படத்தை இயக்கிய விக்ரம்குமார்...

'ஜித்து ஜில்லாடி'யை அடுத்து தேவா பாடிய குத்துப்பாடல்

ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்த 'தெறி' படத்தில் இடம்பெற்ற 'ஜித்து ஜில்லாடி' என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடிய தேவா, கருணாகரனுக்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார்...

மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா? கமலின் அடுத்த பட அழைப்பிதழ்

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் தொடக்கவிழா நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 29-ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் தொடங்கவுள்ளது...

ஒரே படத்தில் சூர்யா-கார்த்தி-விஷால்

சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைத்த லாபத்தில் நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டதும் மீதிப்பணம்...

சூர்யாவின் அடுத்த சமுதாய பணி நாளை முதல் ஆரம்பம்

பிரபல நடிகர் சூர்யா, நடிப்பு மட்டுமின்றி சமூக அக்கறையுடன் பல சமுதாயப் பணிகளையும் செய்து வருகிறார்...