'விவேகம்' டீசர் ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Monday,April 03 2017]

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித், காஜல் அகர்வால் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஏனெனில் படக்குழுவினர் வரும் 19ஆம் தேதி இந்தியா திரும்பவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 17 அல்லது 18ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கேரியாவில் ஒருபக்கம் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சென்னையில் இந்த படத்தின் டீசர் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் வரும் மே 1ஆம் தேதி, அஜித் பிறந்த நாளில் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

More News

நயன்தாராவின் 'டோரா' ஓப்பனிங் வசூல் நிலவரம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த 'டோரா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களில் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

ஓப்பனிங் வசூலில் குறி தவறாத 'கவண்'

விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படம் ஒப்பனிங் வசூலை குறிதவறாமல் அடித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். விஷால் வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை நடந்தது. இந்த தேர்தலில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.  இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால், கே.ஆர் மற்றும் ராதாகிருஷ்ணன் அணிகள் போட்டியிட்டன

சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை? என்னதான் நடக்குது

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியம் என்பதும், ஆதார் அட்டை இல்லையென்றால் பல அடிப்படை சலுகைகளை இழக்க நேரும் நிலையும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஆதார் அட்டையை பெற்று வருகின்றனர்...

ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்த ஆனந்த யாழ்'. முத்துகுமாருக்கு புகழாரம்

மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் அவர்கள் எழுதிய 'ஆனந்த யாழ்' என்ற பாடல் ஒவ்வொரு தந்தையின் மனதிலும் ஊடுருவி ஒரு இன்ப அனுபவத்தை கொடுத்தது என்பதை அனைவரும் அறிவர். இந்த ஒரே ஒரு பாடல் மட்டும் தயாரிப்பாளருக்கு ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது...