விவேகம்' படப்பிடிப்பிற்காக பல்கேரியா கிளம்பினார் தல அஜித்.

  • IndiaGlitz, [Wednesday,March 15 2017]

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் பிரமாண்டமான திரைப்படமான 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஏற்கனவே படக்குழுவினர் பல்கேரியா சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்றிரவு அஜித்தும் பல்கேரியா கிளம்பியுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இன்று பல்கேரியா செல்லும் அஜித் மார்ச் 16 முதல் அதாவது நாளை முதல் 'விவேகம்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'விவேகம்' படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக பல்கேரியா சென்றுள்ள நிலையில் சென்னையில் இந்த படத்தின் டீசர் பணிகளை டெக்னிக்கல் குழுவினர் விறுவிறுப்பாக தயார் செய்து வருகின்றனர். அனேகமாக இன்னும் ஒருசில நாட்களில் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது

மேலும் இந்த படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் 'V' செண்டிமெண்டில் அமைந்துள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது 10ஆம் தேதி செண்டிமெண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்-சிவா இணைந்த முந்தைய படமான 'வேதாளம்' திரைப்படமும் 10ஆம் தேதிதான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதியின் 'கவண்' சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி

விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

விஸ்வரூபம்' விஷயத்தில் நன்றி மறந்துவிட்டார் கமல். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் ஆவேசமாக கருத்துக்கள் ஒருசில அரசியல்வாதிகளை எரிச்சல் அடைய செய்துள்ளன. பெருவாரியான பொதுமக்களின் எண்ணங்களையே அவர் பிரதிபலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் மீது பதில் தாக்குதல், போலீஸ் புகார் உட்பட அரசியல்வாதிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித

ரஜினி, கமல் பட நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின்கபூர் நேற்றிரவு திடீரென அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியும் பெறவில்லை. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது...

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கெளதமியா?

பிரபல நடிகை கெளதமி, நடிப்பில் மட்டுமின்றி சமூகசேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பதும் மனதில் தோன்றிய கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துபவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து முதன்முதலாக தைரிய