நள்ளிரவில் பீச்சில் செம்ம ஆட்டம்.. அஜித் பட நடிகையின் வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,August 14 2023]

அஜித் படத்தில் நடித்த நடிகை நள்ளிரவில் பீச்சில் தனது கணவர் மற்றும் மகனுடன் செம்ம ஆட்டம் போட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் நடித்த ’வரலாறு’ சேரன் நடித்த ’ஆட்டோகிராப்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் பல மலையாள மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகர் கனிகா. சமீபத்தில் வெளியான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் கூட முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தற்போது ’எதிர்நீச்சல்’ சீரியலிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கனிகா, கடந்த 2008 ஆம் ஆண்டு சியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

தனது குடும்ப புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கனிகா பதிவு செய்து வருவார். அந்த வகையில் சற்று முன் அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் நள்ளிரவில் பீச்சில் ஆட்டம் போட்ட வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

ரஜினிக்கு போன் செய்து பேசிய கமல்ஹாசன்.. என்ன பேசினார்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை உலக நாயகன் கமல்ஹாசன் போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி கால நண்பர்களை சந்தித்த நடிகர் தனுஷ்.. க்யூட் புகைப்படம்..!

நடிகர் தனுஷ் தனது பள்ளி கால நண்பர்களை சமீபத்தில் சந்தித்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

'போர் தொழில்' இரண்டாம் பாகம் உருவாகிறதா? அசோக் செல்வன் கூறிய முக்கிய தகவல்..!

சமீபத்தில் வெளியான 'போர் தொழில்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

அனிருத் குரலில் ஒரு மெலடி டூயட் பாடல்.. வெளியானது 'ஜவான்' சிங்கிள்..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த  'ஜவான்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில்

விஜய்யை அடுத்து மாஸ் நடிகருடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா.. க்யூட் வீடியோ வைரல்..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகி ஆக நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாஸ் நடிகர் படத்தில் நடிக்க உள்ளதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது