'சண்டக்கோழி 2' படத்தின் நாயகி ஆவாரா ஷாம்லி?

  • IndiaGlitz, [Friday,July 24 2015]

விஷால் நடித்து வரும் பாயும் புலி' திரைப்படம் வரும் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ள நிலையில் அவரது அடுத்த படமான 'சண்டக்கோழி 2' படத்தின் ஸ்கிரிப்ட் தற்போது தயாராகி, நடிகர், நடிகர்களை புக் செய்யும் நிலைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

முதலில் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கக்கூடிய நடிகைகளை தேர்வு செய்வதில் இயக்குனர் லிங்குசாமி தீவிரமாக உள்ளார். இந்த படத்தில் தமன்னா அல்லது நயன்தாரா நடிப்பார்கள் என்று வந்த செய்தியை விஷால் மறுத்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக அஜீத் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் நாடு திரும்பிய ஷாமிலி, தமிழ் திரைப்படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அவரது புகைப்படங்களை சமீபத்தில் இணையதளங்களில் பார்த்த லிங்குசாமி, சண்டக்கோழி 2' படத்தின் ஸ்கிரிப்டுக்கும் இவர் பொருத்தமாக இருப்பார் என கருதியதாக கூறப்படுகிறது. லிங்குசாமி தரப்பில் இருந்து ஷாமிலியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சண்டக்கோழி முதல் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மின், மற்றும் அப்பாவாக நடித்த ராஜ்கிரண் ஆகிய இருவருமே இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் டி.இமான் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

More News

விஜய்-ஸ்ருதிஹாசன் பாடிய முழுமையான பாடல் ரிலீஸ்

இளையதளபதி விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடியுள்ள 'ஏண்டி ஏண்டி' பாடல் இன்று மாலை ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.......

ஈசிஆர் சாலையில் விஜய் சேஸிங் காட்சிகள் படப்பிடிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது...

'தல 56' படத்தில் ஸ்ருதிஹாசன் வழக்கறிஞரா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனின்...

'பாகுபலி'யில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் - மதன்கார்க்கி விளக்கம்

சமீபத்தில் வெளியான 'பாகுபலி' திரைப்படம் இந்திய அளவில் பல சாதனைகளை செய்து வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியதாக கூறி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது....

நண்பர்களுக்காக தாக்குதலை திடீரென நிறுத்திய விக்ராந்த்?

வரும் ஜூலை 31ஆம் தேதி ஜெயம் ரவியின் சகலகலாவல்லவன், விக்ரம் பிரபுவின் 'இது என்ன மாயம்', விஜய் சேதுபதியின் 'ஆரஞ்சு மிட்டாய்', விக்ராந்த்...